செய்திகள்
அனுமன்கார்ஹி கோவில்

அயோத்தி அனுமன் கோவிலில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி

Published On 2020-08-05 06:22 GMT   |   Update On 2020-08-05 06:22 GMT
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்காக செல்லும், பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
அயோத்தி:

அயோத்தி செல்லும் பக்தர்கள் முதலில் அனுமன்கார்ஹி கோவிலில் வழிபாடு செய்த பின்னரே ராமனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். 

ராவணனை வீழ்த்தி விட்டு அயோத்தி திரும்பும் ராமபிரான் அந்த இடத்தை அனுமனுக்கு கொடுத்தார். அதனால் அந்த இடம் அனுமன் கார்ஹி என அழைக்கப்படுகிறது.

அதன்படி பிரதமர் மோடியும் இன்று முதலில் அனுமன் கார்ஹியில் வழிபாடு செய்தபின்னரே பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி லக்னோ சென்றடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்றடைந்தார். 

முதல் நிகழ்ச்சியாக, அயோத்தியில் அமைந்துள்ள அனுமன்கார்ஹியில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். அவருடன் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.
Tags:    

Similar News