செய்திகள்
வானிலை நிலவரம்

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

Published On 2020-08-04 04:56 GMT   |   Update On 2020-08-04 04:56 GMT
வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய வானிலை மையம் கூறியுள்ளதாவது:

வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை தொடரும்.

கேரளா, கர்நாடகாவில் மிக கனமழையும், ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கோவா மற்றும் மத்திய பிரதேசத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என தெர்வித்துள்ளது.

அந்தமான், நிகோபார் உள்ளிட்டபகுதிகளுக்கு 4 நாட்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News