செய்திகள்
குஜராத்தில் லேசான நிலநடுக்கம்: வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின
குஜராத்தின் பருக் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் மாவட்டத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.
ஆமதாபாத் :
குஜராத்தின் பருக் மாவட்டத்தை மையமாக கொண்டு நேற்று மாலை 5.19 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பரூக் நகரில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் சுமார் 7 கி.மீ.க்கு அப்பால் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
ரிக்டர் அளவுகோலில் 3.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் மாவட்டத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. உடனே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்ட வெளிகளில் தஞ்சம் புகுந்தனர்.
ஆனால் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இந்த நிலநடுக்கத்தால் பருக் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.
குஜராத்தின் பருக் மாவட்டத்தை மையமாக கொண்டு நேற்று மாலை 5.19 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பரூக் நகரில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் சுமார் 7 கி.மீ.க்கு அப்பால் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
ரிக்டர் அளவுகோலில் 3.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் மாவட்டத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. உடனே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்ட வெளிகளில் தஞ்சம் புகுந்தனர்.
ஆனால் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இந்த நிலநடுக்கத்தால் பருக் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.