செய்திகள்
முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி

Published On 2020-08-04 02:58 GMT   |   Update On 2020-08-04 02:58 GMT
கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1.35 லட்சத்தை தாண்டிள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 
கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல் மந்திரி எடியூரப்பா அடிக்கடி அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்திவந்தார். 

இதற்கிடையே, முதல் மந்திரி பிஎஸ் எடியூரப்பா மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News