செய்திகள்
மணிப்பூரில் 3.5 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம்
மணிப்பூரில் இன்று அதிகாலை 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சண்டிகர்:
மணிப்பூர் மாநிலத்தின் சுரசந்த்பூர் பகுதியில் இன்று அதிகாலை 5.52 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.