செய்திகள்
ரக்ஷா பந்தன் பண்டிகை : பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர், அமிர்தானந்தமயி வாழ்த்து
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு பாடகி லதா மங்கேஷ்கர், மாதா அமிர்தானந்தமயி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடிக்கு பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “பிரதமர் மோடிக்கு என்னால் இந்த தடவை ராக்கி கயிறு அனுப்பி வைக்க முடியவில்லை. சகோதரரே, நீங்கள் மக்களால் மறக்க முடியாத அளவுக்கு நாட்டுக்காக கடுமையாக உழைக்கிறீர்கள், நன்றாக பேசுகிறீர்கள். நாட்டை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல பாடுபடுவேன் என்று நீங்கள் உறுதி அளிக்க வேண்டும்” என்று லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.
அதற்கு பிரதமர் மோடி அளித்துள்ள பதிலில், “உங்கள் வாழ்த்து எனக்கு ஊக்கமும், சக்தியும் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு மாதா அமிர்தானந்தமயி வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்து செய்தியில், “நீங்கள் நாட்டுக்காக நல்ல காரியம் செய்து வருகிறீர்கள். மக்களுக்காக பாடுபட உங்களுக்கு கடவுளின் ஆசி நீடிக்கட்டும்”‘ என்று கூறியுள்ளார்.
அதற்கு பிரதமர் மோடி “தங்கள் வாழ்த்து எனக்கு மிகுந்த வலிமை அளிக்கிறது. நாட்டுக்காக பணியாற்றுவது எனக்கு கிடைத்த பேறு” என்று கூறியுள்ளார்.
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடிக்கு பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “பிரதமர் மோடிக்கு என்னால் இந்த தடவை ராக்கி கயிறு அனுப்பி வைக்க முடியவில்லை. சகோதரரே, நீங்கள் மக்களால் மறக்க முடியாத அளவுக்கு நாட்டுக்காக கடுமையாக உழைக்கிறீர்கள், நன்றாக பேசுகிறீர்கள். நாட்டை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல பாடுபடுவேன் என்று நீங்கள் உறுதி அளிக்க வேண்டும்” என்று லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.
அதற்கு பிரதமர் மோடி அளித்துள்ள பதிலில், “உங்கள் வாழ்த்து எனக்கு ஊக்கமும், சக்தியும் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
அதற்கு பிரதமர் மோடி “தங்கள் வாழ்த்து எனக்கு மிகுந்த வலிமை அளிக்கிறது. நாட்டுக்காக பணியாற்றுவது எனக்கு கிடைத்த பேறு” என்று கூறியுள்ளார்.