செய்திகள்
மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்

அமித்ஷாவுக்கு கொரோனா - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தனிமைப்படுத்திக் கொண்டார்

Published On 2020-08-03 10:09 GMT   |   Update On 2020-08-03 10:09 GMT
உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக, மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
புதுடெல்லி:

மத்திய உள்துறை அமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தபோது மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

தற்போது அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாக கூறிய நிலையில், மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர். அதன்படி அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் உடல்நிலை சீராக இருப்பதாக அமித் ஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக, மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை உள்துறை மந்திரி அமித்ஷாவை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் சந்தித்தார். இதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டார் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News