செய்திகள்
வெள்ளத்தில் சிக்கிய கார்

தரைப்பாலத்தை கடந்தபோது 2 பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் -வீடியோ

Published On 2020-07-30 09:51 GMT   |   Update On 2020-07-30 09:51 GMT
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் தரைப்பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அனந்தபூர்:

ஆந்திர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தரைப்பாலங்களில் தண்ணீர் அபாய அளவை தாண்டி ஓடுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் ஆபத்தை உணராமல் பாலத்தை கடந்து செல்கின்றனர்.


இந்நிலையில், அனந்தபூரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற ஒரு கார் வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டது. 

2 பேருடன் சென்ற அந்தக் கார், பாலத்தின் நடுப்பகுதி வரை எந்த பிரச்சனையும் இன்றி சென்றது. பாதி தூரத்தை தாண்டியபிறகு கார் நிலைகுலைந்து வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News