செய்திகள்
தரைப்பாலத்தை கடந்தபோது 2 பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் -வீடியோ
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் தரைப்பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அனந்தபூர்:
ஆந்திர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தரைப்பாலங்களில் தண்ணீர் அபாய அளவை தாண்டி ஓடுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் ஆபத்தை உணராமல் பாலத்தை கடந்து செல்கின்றனர்.
#WATCH Andhra Pradesh: A car with 2 passengers inside gets washed away in Anantapur while crossing a rivulet. pic.twitter.com/LTKTLTltYU
— ANI (@ANI) July 30, 2020
இந்நிலையில், அனந்தபூரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற ஒரு கார் வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டது.
2 பேருடன் சென்ற அந்தக் கார், பாலத்தின் நடுப்பகுதி வரை எந்த பிரச்சனையும் இன்றி சென்றது. பாதி தூரத்தை தாண்டியபிறகு கார் நிலைகுலைந்து வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.