செய்திகள்
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மன்மோகன்சிங், ப.சிதம்பரம், வேணுகோபால், குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, வயலார் ரவி, ஆனந்த் சர்மா உள்ளிட்ட எம்பிக்கள் பங்கேற்றனர்.
தற்போதைய அரசியல் சூழல் மற்றும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அதுகுறித்தும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்த 20ம் தேதி காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாகவே மாநிலங்களவை உறுப்பினர்களுடனான கூட்டம் நடைபெற்றுள்ளது.