செய்திகள்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்தியா பதிலடி

Published On 2020-07-28 17:59 GMT   |   Update On 2020-07-28 17:59 GMT
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்தது.
ஸ்ரீநகர்:
 
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்றும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள  எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியான மாச்சல் மற்றும் குகல்தார் செக்டாரில் இன்று பிற்பகலில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

மோர்டார்கள் உள்பட பிற ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.
Tags:    

Similar News