செய்திகள்
ராகுல் காந்தி

ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் -சீன விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்

Published On 2020-07-27 10:43 GMT   |   Update On 2020-07-27 10:43 GMT
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

சீனாவுடனான எல்லை மோதல் தொடர்பாகவும், இந்த விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை விமர்சித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த உண்மையை மறைத்து, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம். இந்த விவகாரத்தை மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவது தேசபக்தி.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே ஓர் இந்தியனாக தலையாய பணி. நமது மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது தெளிவாக தெரிகிறது. இது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்களை பார்த்த பிறகும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசிய பிறகும் நமது மண்ணை சீனா ஆக்கிரமிக்கவில்லை என எப்படி பொய் கூற முடியும்? இந்த விவகாரத்தில் தொடர்ந்து உண்மைகளை உரத்த குரலில் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News