செய்திகள்
கொரோனா வைரஸ்

பீகாரில் கொரோனா நோயாளி ஆஸ்பத்திரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை

Published On 2020-07-26 05:52 GMT   |   Update On 2020-07-26 05:52 GMT
பீகாரில் 2-வது முறையாக கொரோனா நோயாளி ஆஸ்பத்திரியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:

பீகார் மாநில தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர் ராகுல் குமார். 21 வயதான இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 20-ந்தேதி உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் ராகுல் குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராகுல் குமார் ஆஸ்பத்திரியின் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். பாட்னா எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொள்வது இது 2-வது முறையாகும்.முன்னதாக கடந்த மாதம் 22-ந்தேதி 32 வயதான கொரோனா நோயாளி ஒருவர் ஆஸ்பத்திரி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News