செய்திகள்
அசாம் காசிரங்கா தேசிய பூங்கா சேதம் : இங்கிலாந்து இளவரசர், இளவரசி கவலை
அசாம் காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தால் சேதம் அடைந்ததற்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே மிடில்டன் கவலை தெரிவித்துள்ளனர்.
கவுகாத்தி:
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அசாம் மாநிலம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அங்குள்ள புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவில் 120 வன உயிரினங்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. 95 சதவீத பூங்கா பகுதி, வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த பூங்காவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே மிடில்டன் ஆகியோர் நேரில் வந்துள்ளனர். எனவே, வெள்ள சேதம் குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில் வில்லியம் கூறியிருப்பதாவது:-
காசிரங்கா பூங்காவுக்கும், வன உயிரினங்களுக்கும் ஏற்பட்ட சேதத்தை அறிந்து எனக்கும், கேதே மிடில்டனுக்கும் இதயமே நொறுங்கி விட்டது. கொரோனா தாக்கத்துக்கு இடையே ஏற்பட்ட உயிரிழப்புகள் வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அசாம் மாநிலம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அங்குள்ள புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவில் 120 வன உயிரினங்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. 95 சதவீத பூங்கா பகுதி, வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த பூங்காவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே மிடில்டன் ஆகியோர் நேரில் வந்துள்ளனர். எனவே, வெள்ள சேதம் குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில் வில்லியம் கூறியிருப்பதாவது:-
காசிரங்கா பூங்காவுக்கும், வன உயிரினங்களுக்கும் ஏற்பட்ட சேதத்தை அறிந்து எனக்கும், கேதே மிடில்டனுக்கும் இதயமே நொறுங்கி விட்டது. கொரோனா தாக்கத்துக்கு இடையே ஏற்பட்ட உயிரிழப்புகள் வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.