செய்திகள்
ராகுல் காந்தி

ராமராஜ்ஜியத்துக்கு பதிலாக குண்டர் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள்: ராகுல் காந்தி

Published On 2020-07-23 03:16 GMT   |   Update On 2020-07-23 03:16 GMT
உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர் கொலைக்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி ராமராஜ்ஜியம் நடத்தப்போவதாக வாக்குறுதி அளித்தவர்கள், தற்போது குண்டர் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.
புதுடெல்லி :

உத்தரபிரதேசத்தில் தனது மருமகளை ஒரு கும்பல் துன்புறுத்துவதாக போலீசில் புகார் செய்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி என்பவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மருமகளை துன்புறுத்தியதை எதிர்த்ததற்காக பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டுள்ளார். ராமராஜ்ஜியம் நடத்தப்போவதாக வாக்குறுதி அளித்தவர்கள், தற்போது குண்டர் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் வன்முறை அதிகரித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து ஆளும் பா.ஜ.க. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை ராகுல் காந்தி மறைமுகமாக தாக்கியுள்ளார்.
Tags:    

Similar News