செய்திகள்
முழு ஊரடங்கு உத்தரவு

மேற்கு வங்காளத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு உத்தரவு

Published On 2020-07-20 13:52 GMT   |   Update On 2020-07-20 13:52 GMT
மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியதையடுத்து வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில உள்துறை செயலாளர் கூறியுள்ளார்.
கொல்கத்தா:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
ஆனால், கொரோனா கட்டுப்பாட்டில் உள்ள சில மாநிலங்கள் ஊரடங்கை தளர்த்தி பொதுப்போக்குவரத்து போன்ற நடைமுறைகளை அமல்படுத்தியும் வருகின்றன.

இதற்கிடையில், மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோன வைரஸ் அதிகரிக்க தொடங்கியதால் ஊரடங்கை ஜூலை 31 வரை நீடித்து அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநில உள்துறை செயலாளர் ஆலப்பன் பந்தோபாத்யா செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் பேசும்பொழுது, கொரோனா பரவல் காரணமாக இந்த வாரத்தில் இருந்து, இனி ஒவ்வொரு வாரமும் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்தார்.  நடப்பு வாரத்தில் இருந்து அதாவது வியாழன் மற்றும் சனி ஆகிய நாட்களில் ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தும்.  இதுதவிர கட்டுப்படுத்தப்பட்ட மண்டல பகுதிகளிலும் ஊரடங்கு தொடரும்.  மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு இருக்கும் என கூறினார்.

கொரோனா தொற்று மாநிலத்தில் அதிகளவில் பரவி வருவதால், அது சமூகத்தில் பரவி வருகிறது என்றே கருதப்படுகிறது.  சில குழுக்களில் கொரோனா பரவி பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், இதுபற்றி விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னரே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News