செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 160 பேருக்கு கொரோனா

Published On 2020-07-17 06:17 GMT   |   Update On 2020-07-17 06:17 GMT
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 160 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருமலை:

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமலையில் ஏழுமலையான் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநில காவல் துறையை சேர்ந்த சிறப்புப் போலீசாரில் 60 பேருக்கும், திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 16 பேருக்கும், லட்டு தயாரிப்பு மற்றும் வினியோகத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 14 பேருக்கும், ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 70 பேருக்கும் ஆக மொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொத்தம் 40 அர்ச்சகர்கள் உள்ளனர். அதில் 14 அர்ச்சகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் திருமலையில் உள்ள அர்ச்சகர்கள் பவனில் தனித்தனி படுக்கையில் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News