செய்திகள்
தேடுதல் வேட்டையில் வீரர்கள் (கோப்பு படம்)

குல்காம் என்கவுண்டர்- 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2020-07-17 05:46 GMT   |   Update On 2020-07-17 05:46 GMT
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டம், நாகநாத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச்சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் காயமடைந்தார். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
Tags:    

Similar News