செய்திகள்
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.36 லட்சமாக உயர்வு- 5.92 லட்சம் பேர் குணமடைந்தனர்

Published On 2020-07-15 03:58 GMT   |   Update On 2020-07-15 03:58 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 582 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 9,36,181 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 582 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,309 ஆக உயர்ந்துள்ளது. உயரிழப்பு விகிதம் 2.6 சதவீதமாக உள்ளது.

இதுவரை 5,92,032 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 63.3 சதவீதமாக உள்ளது.  நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,19,840 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 267665 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 149007 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 10695  பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 147324 பேருக்கும், டெல்லியில் 115346 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News