செய்திகள்
ஏர் இந்தியா

இந்தியாவில் விமான சேவை சார்ந்த 30 லட்சம் பேர் வேலை இழப்பு

Published On 2020-07-14 03:10 GMT   |   Update On 2020-07-14 03:10 GMT
இந்திய விமான துறையை சார்ந்திருக்கும் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், இந்த ஊரடங்கு காலத்தில் ஆசிய அளவில் விமான சேவைகளில் சுமார் 2 லட்சத்து 20 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 

உலக அளவில் 6 லட்சத்து 35 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் விமான சேவையை சார்ந்துள்ள 30 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News