செய்திகள்
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதே? - ராகுல் காந்தி
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக,ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், இந்திய-சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு ஊடகங்களுக்கு தவறான தகவல்களை அளித்து வருவதாக ஆங்கில இணையதள பத்திரிகைக்கு கர்னால் அஜய் சுக்லா அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி, மோடி ஆட்சியில் இந்தியாவின் புண்ணிய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதே? என கேள்வி எழுப்பியுள்ளார்.