செய்திகள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடக்கும்: மத்திய அமைச்சர்
இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை, ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் அதிக அளவில் உள்ளதாக இத்தொடர் நடைபெறுமா?. அப்படி நடைபெற்றால் எம்.பி.க்கள. சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தன.
இந்நிலையில் நாடாளுன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும். அரசு அனைத்து நடைமுறைகளையும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யும் என்ற நாடாளுமன்றத்திற்கான விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.