செய்திகள்
கேரளாவில் இன்று புதிதாக 488 பேருக்கு கொரோனா
கேரளாவில் இன்று ஒரே நாளில் 488 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட தகவலின் படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 488 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 164 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள், 76 பேர் வெளி மாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள். எஞ்சியோர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 143 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.