செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது - ராகுல் காந்தி

Published On 2020-07-10 18:42 GMT   |   Update On 2020-07-10 18:42 GMT
கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது சரியல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது சரியல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தேர்வுகளை நடத்துவது முற்றிலும் நியாயமற்றது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் குரலுக்கு யுஜிசி கண்டிப்பாக செவிமடுக்க வேண்டும். தேர்வுகள் ரத்து செய்யப்படுவதோடு முந்தைய தேர்வுகளில் மாணவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து மாணவர்களை மேல் வகுப்புக்கு அனுமதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News