செய்திகள்
நாளை முதல் 13ம் தேதி வரை முழு ஊரடங்கு - உ.பி. அரசு அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் நாளை இரவு முதல் 13-ம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளை இரவு 10 மணி முதல் 13-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு 10,373 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 21,127 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாளில் ஊரடங்கு மிகவும் கடுமையாக அமல்படுத்தப்படும். அத்தியாவசிய தேவை தவிர பிற அனைத்து போக்குவரத்துகளும் தடை செய்யப்படும். அரசு அலுவலகங்கள், கடைகள் மற்றும் சந்தைகள் அனைத்தும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.