செய்திகள்
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி

மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

Published On 2020-07-09 10:09 GMT   |   Update On 2020-07-09 10:09 GMT
மிசோரம் மாநிலத்தில் இன்று மதியம் 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
ஐசால்:

மிசோரம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாம்பாய் மாவட்டத்தில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

நண்பகல் 2.28 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கின. 

இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த சில நாட்களாக அருணாச்சலபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் தொடரந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News