செய்திகள்
நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்

24 மணி நேரத்தில் 24879 பேருக்கு தொற்று... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.67 லட்சமாக உயர்வு

Published On 2020-07-09 04:21 GMT   |   Update On 2020-07-09 04:21 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 487 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 767296  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 487 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21129 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை 476378 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 269789 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 223724 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 122350  பேருக்கும், டெல்லியில் 104864 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News