செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கொரோனா நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள், வங்கிகள் மறு சீரமைப்பு, விமான நிலையங்களுக்கு ஒப்புதல் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன.