செய்திகள்
கோப்பு படம்

ஜம்மு காஷ்மீரில் திடீரென நிலநடுக்கம்

Published On 2020-07-07 21:32 GMT   |   Update On 2020-07-07 21:35 GMT
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி பகுதியில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக பதிவான நில நடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எல்லையோர பகுதியான ரஜோரியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.  

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் மக்கள் சற்று பதற்றம் அடைந்தனர்.

ஆனாலும், நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால்
கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள்
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரின் ரஜோரி மாவாட்டத்தில் இரவு நேரத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். 
Tags:    

Similar News