செய்திகள்
முதல் மந்திரி பினராயி விஜயன்

கேரளாவில் இன்று மேலும் 272 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-07-07 13:14 GMT   |   Update On 2020-07-07 13:14 GMT
கேரளாவில் இன்று மேலும் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் இன்று மேலும் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 272 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 195 பேர் உட்பட 272 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,794 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கேரளத்தில் 2,412 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News