செய்திகள்
நளின்குமார் கட்டீல், டிகே சிவக்குமார்

மூழ்கும் படகிற்கு தலைவரான டி.கே.சிவக்குமார்: நளின்குமார் கட்டீல் கிண்டல்

Published On 2020-07-06 03:43 GMT   |   Update On 2020-07-06 03:43 GMT
பா.ஜனதா தொண்டர்களை அடிப்படையாக கொண்ட கட்சி. அதனால் தான் காங்கிரஸ் பயப்படுகிறது என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் மூழ்கும் படகிற்கு டி.கே.சிவக்குமார் தலைவராகியுள்ளார். ஊரடங்கின்போது கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்று எங்கள் கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி நாங்கள் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினோம். மருந்துகள், முகக்கவசங்கள் வினியோகம் செய்தோம்.

கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஒழிக்க யாராலும் முடியாது. நாங்கள் காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பா.ஜனதா தொண்டர்களை அடிப்படையாக கொண்ட கட்சி. அதனால் தான் காங்கிரஸ் பயப்படுகிறது. காங்கிரஸ் தனி நபர்களை அடிப்படையாக கொண்ட கட்சி.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.
Tags:    

Similar News