செய்திகள்
கர்நாடகா நிலச்சரிவு

கர்நாடகா நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - தலா ரூ.5 லட்சம் நிதியுதவி

Published On 2020-07-05 15:11 GMT   |   Update On 2020-07-05 15:13 GMT
கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகினர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: 

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், குருபுரா பகுதியில் இன்று மதியம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News