செய்திகள்
சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா

கேரளாவில் மேலும் 240 பேருக்கு கொரோனா - 5 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை

Published On 2020-07-04 13:35 GMT   |   Update On 2020-07-04 13:35 GMT
கேரளாவில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, ஷைலஜா கூறுகையில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 240 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,204 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கேரளத்தில் 2,129 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News