செய்திகள்
விமான சேவை

சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை - கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு

Published On 2020-07-04 12:16 GMT   |   Update On 2020-07-04 12:16 GMT
சென்னையில் இருந்து வரும் 19-ம் தேதி வரை விமானங்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது என கொல்கத்தா விமான நிலையம் இன்று அறிவித்துள்ளது.
கொல்கத்தா:

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.  தொடர்ந்து, தமிழகம், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமாக சென்றுள்ளது.  தமிழக தலைநகர் சென்னைதான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முதலிடம் வகிக்கிறது.

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,689 ஆக உள்ளது. இன்று வரை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 1,009 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து வரும் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை விமானங்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது என கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கொல்கத்தா விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து வரும் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, எது முன்பே வருமோ அதுவரை, விமான சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News