செய்திகள்
லடாக் பகுதியை யாரும் ஆக்கிரமிக்கவில்லையா?: பிரதமர் மோடி பேசியது பற்றி ராகுல் காந்தி கருத்து
லடாக் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் பிரதமர் நமது நிலத்தை யாரும் பறிக்கவில்லை என்று சொல்கிறார். இதில் யாரோ பொய் சொல்கிறார்கள் என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி :
லடாக்கில் லே பகுதியில் உள்ள நிமு முகாமில் பிரதமர் மோடி நேற்று ராணுவ வீரர்கள் மத்தியில் பேசியது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், “லடாக் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் பிரதமர் நமது நிலத்தை யாரும் பறிக்கவில்லை என்று சொல்கிறார். இதில் யாரோ பொய் சொல்கிறார்கள்” என்று கூறி உள்ளார்.
லடாக்கில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக லடாக்கைச் சேர்ந்தவர்கள் பேசிய வீடியோவில் உள்ள குரல் பதிவையும் ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டுள்ளார்.