செய்திகள்
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இதுவரை 90.56 லட்சம் மாதிரிகள் பரிசோதனை- ஐசிஎம்ஆர்

Published On 2020-07-02 04:52 GMT   |   Update On 2020-07-02 04:52 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.29 லட்சம் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 17834 பேர் உயிரிழந்துள்ளனர். 3.59 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2.26 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று வரை 90,56,173 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,29,588 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரிப்பதாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
Tags:    

Similar News