செய்திகள்
முதல்-மந்திரி பினராய் விஜயன்

கேரளாவில் மேலும் 131 பேருக்கு கொரோனா

Published On 2020-06-30 13:26 GMT   |   Update On 2020-06-30 14:30 GMT
கேரளாவில் இன்று புதிதாக 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.

அந்த தகவலின் படி, அம்மாநிலத்தில் இன்று புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.

இன்றை வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 111 பேர் உட்பட 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 75 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,304 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு கேரளாவில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News