செய்திகள்
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வீரர்கள் (கோப்பு படம்)

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை வீழ்த்தியது பாதுகாப்பு படை

Published On 2020-06-30 03:42 GMT   |   Update On 2020-06-30 03:42 GMT
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு திட்டமிடும் பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவம், உள்ளூர் போலீஸ் இணைந்த கூட்டுப்படை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. கடந்த சில தினங்களாக நடந்த தேடுதல் வேட்டையின்போது பல்வேறு முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டம் வாகாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். 

அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதம் மட்டும் 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஜ்புல் முஜாகிதீன் கமாண்டர் என்று அழைக்கப்படும் மசூத் அகமது நேற்று நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டதையடுத்து, தோடா மாவட்டம் பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறியிருப்பதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News