செய்திகள்
கொல்லப்பட்ட பயங்கரவாதி மசூத்

காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் கமாண்டர் சுட்டுக்கொலை- பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறிய தோடா

Published On 2020-06-29 05:51 GMT   |   Update On 2020-06-29 05:51 GMT
ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டம் பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறியிருப்பதாக போலீஸ் டிஜிபி தில்பக் சிங் கூறியுள்ளார்.
ஸ்ரீநகர்: 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஆனந்த்நாக் மாவட்டம், குல்சோஹர் பகுதியில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் மசூத் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இது தொடர்பாக டிஜிபி தில்பக் சிங் கூறுகையில், ஆனந்த்நாக் மாவட்டம் குல்சோஹர் பகுதியில் போலீசாருடன் நடந்த மோதலில், பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் மசூத் மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால், தோடா மாவட்டம் பயங்கரவாதி இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. 

தோடா மாவட்டத்தை சேர்ந்த மசூத் மீது பலாத்கார வழக்கு உள்ளது. இதனால், தலைமறைவான அவன், ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்து, காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்தான்’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News