செய்திகள்
அசாம் வெள்ளம்

அசாமில் மழை, வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி - 9 லட்சம் பேர் பாதிப்பு

Published On 2020-06-29 00:07 GMT   |   Update On 2020-06-29 00:07 GMT
அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை18 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தர பிரதேசம், பீகாரில் கடந்த ஓரிரு தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை18 ஆக அதிகரித்துள்ளது.
அங்குள்ள 23 மாவட்டங்களில் உள்ள 9.3 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். 

மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி 2 பேர் பலியாகினர். இதையடுத்து, மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News