செய்திகள்
பிரதமர் மோடி

மக்கள் இப்போது தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

Published On 2020-06-28 06:50 GMT   |   Update On 2020-06-28 06:50 GMT
ஊரடங்குடன் ஒப்பிடும்போது தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாம் இப்போது தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் மோடி வானொலி மூலம் இன்று மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:- 

ஊரடங்கு காலத்துடன் ஒப்பிடும் போது தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாம் இப்போதுதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவேளி உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றமலும் செயல்பட்டால் உங்கள் உயிர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.

* இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது.

* பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

*கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது.

* இந்த ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை.

* கொரோனா வைரஸ் நாம் வாழக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக மாற்றியிருக்கிறது.

*மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவற்றுக்கான தேவை உலக அளவில் அதிகரித்திருக்கிறது.

* இந்திய பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

* ஆரோக்கியமான பூமியை உருவாக்க எல்லா வகையிலும் நாம் நமது பங்களிப்பை வழங்க முடியும்.

* எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைகாதீர்கள்.

*இந்தியா எப்போதும் தனக்கான பிரச்சினைகளை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது.

* ஒரு நாடு எந்த அளவு வலிமையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உலகில் அமைதி நிலவும். 

*நமது சுயமரியாதை, இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

*நட்பை பெறுவது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும், கண்ணுக்கு கண் என்று வந்தால் பதிலடிகொடுக்கவும் தெரியும்.

*எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது .

* தங்கள் குடும்பத்தில் ஒருவர் உயிர் இழந்தாலும் அடுத்தவரை இந்த நாட்டுக்காக அனுப்ப பலர் முன் வந்துள்ளனர்.

பாதுகாப்பு துறையிலும் நாடு சுயசார்பு அடைய வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த மோகன் ராமமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார். 

* சுய சார்பை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது.

*உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்க வேண்டும்.

* நாடு சவால்களை சந்தித்து வரும் இந்த கால கட்டங்களில் பல்வேறு புதிய உருவாக்கங்களும் நடைபெற்றுள்ளன.


Tags:    

Similar News