செய்திகள்
நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- அண்டை நாடுகளிலும் நில அதிர்வு

Published On 2020-06-27 10:15 GMT   |   Update On 2020-06-27 10:15 GMT
ஜம்மு காஷ்மீரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹன்லே பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹன்லேயில் இருந்து வடகிழக்கில் 332 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகாக பதிவாகியிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டுமானங்கள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Tags:    

Similar News