செய்திகள்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் (கோப்பு படம்)

சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்- ஒரு வீரர், குழந்தை உயிரிழப்பு

Published On 2020-06-26 07:45 GMT   |   Update On 2020-06-26 07:45 GMT
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர், ஒரு குழந்தை உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீல் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில், ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுக்குழுவினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெகரா நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு சிஆர்பிஎப் வீரர், ஒரு குழந்தை உயிரிழந்தனர்.
Tags:    

Similar News