செய்திகள்
பிரியங்கா

மக்களிடம் ‘பிக்பாக்கெட்’ அடிப்பதில் பாஜக அரசு ஆர்வம்: பிரியங்கா குற்றச்சாட்டு

Published On 2020-06-26 03:39 GMT   |   Update On 2020-06-26 03:39 GMT
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதற்கு பிரியங்கா காந்தி இந்த இக்கட்டான நேரத்தில் கூட மக்களிடம் ‘பிக் பாக்கெட்’ அடிப்பதில்தான் பா.ஜனதா அரசு ஆர்வமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி :

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தொடர்ந்து 19-வது நாளாக, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த இக்கட்டான நேரத்தில் கூட மக்களிடம் ‘பிக் பாக்கெட்’ அடிப்பதில்தான் பா.ஜனதா அரசு ஆர்வமாக இருப்பது தெளிவாகி இருக்கிறது.

இந்த கொள்ளையை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News