செய்திகள்
குஜராத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 25 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு பணி தீவிரம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடிவருகின்றனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சனந்த் பகுதியில் குஜராத் மாநில தொழிற்துறை மேம்பாட்டு கழக (ஜிஐடிசி) வளாகம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.
இதில் ஒரு தொழிற்சாலையில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பிடித்த தீ, மற்ற பகுதிகளுக்கும் மளமளவெனப் பரவி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
#WATCH Gujarat: Fire breaks out at a factory in GIDC (Gujarat Industrial Development Corporation) in Sanand area of Ahmedabad. 25 fire tenders present at the spot. Fire-fighting operation underway. No casualties reported. pic.twitter.com/shOrlBak5H
— ANI (@ANI) June 24, 2020
தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 25 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.