செய்திகள்
ஜெய்சங்கர்

லடாக் பதற்றத்துக்கு மத்தியில் சீன, ரஷிய வெளியுறவு மந்திரிகளுடன் ஜெய்சங்கர் இன்று ஆலோசனை

Published On 2020-06-23 03:49 GMT   |   Update On 2020-06-23 03:49 GMT
ரஷியா, இந்தியா, சீனா (ரிக்) வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ஒன்று மெய்நிகர் (காணொலி) முறையில் இன்று (செவ்வாக்கிழமை) நடக்கிறது. இதில் ரஷியா, சீனா நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புதுடெல்லி :

ரஷியா, இந்தியா, சீனா (ரிக்) வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ஒன்று மெய்நிகர் (காணொலி) முறையில் இன்று (செவ்வாக்கிழமை) நடக்கிறது. இதில் ரஷியா, சீனா நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று நடத்தப்படுகிறது. இடையில் லடாக்கில் இந்தியா-சீனா ராணுவம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. எனவே இந்த ரிக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா தயக்கம் காட்டி உள்ளது.

ஆனால் கூட்டத்தை நடத்தும் ரஷியாவின் வேண்டுகோள் காரணமாக ஜெய்சங்கர் பங்கேற்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அப்படி லடாக் மோதலுக்கு மத்தியில் நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எனினும் இந்தியா-சீனா மோதல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படாது எனவும், இந்த முத்தரப்பு கூட்டத்தில் இருதரப்பு விவகாரங்கள் எதுவும் பேசுவதில்லை எனவும் ரிக் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அதேநேரம் 3 நாடுகளும் பொதுவாக சந்திக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள், கொரோனா பாதிப்பு மற்றும் பிராந்திய, உலக நிலவரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படுகிறது.
Tags:    

Similar News