செய்திகள்
டிகே சிவக்குமார்

சித்தராமையாவுடன் போட்டி போட மாட்டேன்: டி.கே.சிவக்குமார்

Published On 2020-06-22 03:51 GMT   |   Update On 2020-06-22 03:51 GMT
சித்தராமையா மூத்த தலைவர் என்ற முறையிலும், அவருக்கு உள்ள அனுபவத்தையும் நான் மதிக்கிறேன். அவருடன் நான் போட்டி போட மாட்டேன் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்தனர். சுமார் 3 மாதங்களுக்கு பிறகு, தினேஷ் குண்டுராவின் ராஜினாமா கடிதத்தை மட்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அங்கீகரித்தார். எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சித்தராமையாவே நீடிக்க அக்கட்சி மேலிடம் அனுமதித்தது. மாநில தலைவர் பதவியை யாருக்கு வழங்கலாம் என்று சித்தராமையாவிடம் சோனியா காந்தி ஆலோசனை கேட்டார். அதற்கு எம்.பி.பட்டீல் உள்ளிட்ட சிலரது பெயரை அவர் பரிந்துரை செய்தார். இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் புதிய தலைவராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டார்.

டி.கே.சிவக்குமார் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு சித்தராமையாவுக்கும், அவருக்கும் இடையே சரியான புரிந்துணர்வு இல்லை என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் ஒரு பலம் வாய்ந்த கட்சி. சித்தராமையா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் உள்ளார். அவர் மூத்த தலைவர் என்ற முறையிலும், அவருக்கு உள்ள அனுபவத்தையும் நான் மதிக்கிறேன். அவருடன் நான் போட்டி போட மாட்டேன்” என்றார்.
Tags:    

Similar News