செய்திகள்
நரேந்திரமோடி, ராகுல் காந்தி

நரேந்திரமோடி ‘சரண்டர் மோடி’ ஆகிவிட்டார்: ராகுல் காந்தி

Published On 2020-06-22 03:38 GMT   |   Update On 2020-06-22 03:38 GMT
நரேந்திர மோடி உண்மையிலேயே ‘சரண்டர் மோடி’ ஆகிவிட்டார் என்று இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலை ராகுல் காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.
புதுடெல்லி :

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதல் பற்றி நேற்று முன்தினம் டுவிட்டரில் கருத்து பதிவிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பிரதமர் மோடி இந்திய பகுதியை சீனாவிடம் ஒப்படைத்து விட்டார் என்றும், அந்த நிலம் சீனாவுக்கு சொந்தமானது என்றால் அங்கு நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சீனாவை தாஜா செய்யும் இந்தியாவின் கொள்கை அம்பலமாகி இருக்கிறது” என்று வெளிநாட்டு பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையின் தலைப்பை இணைத்து வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் நரேந்திர மோடி உண்மையிலேயே ‘சரண்டர் மோடி’ ஆகிவிட்டார் என்றும் அதில் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.
Tags:    

Similar News