செய்திகள்
ஆம்புலன்சில் வந்த எம்எல்ஏ

மாநிலங்களவை தேர்தல்- ஆம்புலன்சில் வந்து ஓட்டு போட்ட குஜராத் எம்எல்ஏ

Published On 2020-06-19 10:01 GMT   |   Update On 2020-06-19 10:01 GMT
குஜராத்தில் இன்று மாநிலங்களவைத் தேர்தலின்போது, பாஜக எம்எல்ஏ சோலங்கி உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் ஆம்புலன்சில் வந்து ஒட்டு போட்டார்.
காந்தி நகர்:

ஆந்திரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மிசோரம், மேகாலயா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள 19 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், எம்எல்ஏக்கள் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் மத்தர் சட்டமன்ற உறுப்பினர் கேசரிசிங் ஜெசங்பாய் சோலங்கி, தனது உடல்நலத்தையும்  பொருட்படுத்தாமல் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சோலங்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து நேராக ஆம்புலன்சில் சட்டசபைக்கு வந்து, தனது வாக்குரிமையை நிறைவேற்றினார்.

மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Tags:    

Similar News