செய்திகள்
சரத்பவார்

சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு சரத்பவார் அஞ்சலி

Published On 2020-06-19 03:44 GMT   |   Update On 2020-06-19 03:44 GMT
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான சரத்பவார் அஞ்சலி செலுத்தினார்.
மும்பை :

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான சரத்பவார் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் இதுபற்றி அவர் கூறுகையில், இந்தியாவின் எல்லைகளை தைரியத்துடனும், உறுதியுடனும் பாதுகாக்க நமது ஆயுதபடைகள் உறுதிபூண்டுள்ளன. சீன ஊடுருவலில் இருந்து நமது நாட்டை பாதுகாக்கும் வேளையில் நமது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்கள் ஓய்வெடுக்கட்டும் என்றார். 
Tags:    

Similar News