செய்திகள்
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: டி.கே.சிவக்குமார்
நாட்டின் ஒருமைப்பாடு, அமைதி, ஒற்றுமைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எல்லை பிரச்சினையில் சீனாவுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு, அமைதி, ஒற்றுமைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள். அண்டை நாடுகளுடன் அமைதியை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. காஷ்மீர், இலங்கை விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனாவுடன் மோதல் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எல்லை பிரச்சினையில் சீனாவுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு, அமைதி, ஒற்றுமைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள். அண்டை நாடுகளுடன் அமைதியை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. காஷ்மீர், இலங்கை விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனாவுடன் மோதல் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.